ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்லமுற்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் இயற்கையான மரணம் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் தலையீட்டின் பிரகாரம் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக விஜயகலா மகேஷ்வரன் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .