தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 608 பேர் இன்று(வியாழக்கிழமை) வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41861 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் 59 தனிமைப்படுத்தல் முகாம்களில் மேலும் 6270 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.