உ ண்மைக்கு புறம்பான சாட்சியம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையொன்றின் போது, போலியான சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.