நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, மத்திய, மேல், மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன் மழையுடன் காற்றும் வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.