நாடாளுமன்றில் எந்தவித மாற்றங்களுமின்றி சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

Cabinet 1
Cabinet 1

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் எந்தவித மாற்றங்களும் மெற்கொள்ளாது நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்குரிய திருத்தங்களை நாடாளுமன்றில் வைத்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்த சட்டமூலம் தொடர்பில் கற்றறிந்து ஆராய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு அந்த அறிக்கையும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.