போதை பொருற்களை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

q 10
q 10

சட்டவிரோதமாக ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

q 4
q 4

கடந்த (16.09. 2020) புதன்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன், விஜயவர்த்தன, பொலிஸ் உத்தியோகிஸ்தர்களான துரைசிங்கம் திலகரட்ன உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இரவு சட்டவிரோதமாக ஹெரோயின், ஐஸ், கேரள கஞ்சாவினை வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் நிந்தவூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

q 2
q 2

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், 220 மில்லி கிராம் ஐஸ், 3 கிராம் கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான 45, 30, 28, 17 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் இன்று(17) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.