தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
அந்த நாட்டு பிரதமரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
தாய்லாந்தில் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டமையை அடுத்து அந்த நாட்டு மக்கள் பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.