வெடிப்பொருட்களுடன் இருவர் கைது!

images 4 1
images 4 1

வெடிபொருட்கள் வைத்திருந்து இரு சந்தேக நபர்களை நவகமுவவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம்  இருந்து 134 கிலோ அமோனியம் நைட்ரேட்  மற்றும் வோட்டர் ஜெல் வெடிப்பொருட்கள் உள்பட டெட்டனேட்டர்கள் கைப்பற்றபட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை சம்பூரில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே , அவர்களின் தகவலுக்கு அமைய இன்று இரு நபர்களை பல்வேறு வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவம் குவாரி உரிமையாளர்கள் என தெரியவந்துள்ளதோடு , குறித்த வெடிப்பொருட்களை சட்டவிரோதமாக பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடுஅவற்றை சட்டவிரோதமாக இன்னொருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.