உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல்போனமைக்கான பொறுப்பைத் தன்னால் ஏற்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் 3 ஆவது நாளாக இன்று ஆஜராகினார்.
இன்றைய வாக்குமூலத்தில் அவர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார். அதாவது தீவிரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான கும்பலைக் கைதுசெய்ய முடியாமைக்கான காரணம், அதற்குப் பின்னால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தம் இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.