ச.தொ.ச. நிறுவனத்தில் ஏற்பட்ட பாரிய மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 56 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாக விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பெப்ரவரியில் ச.தொ.ச.வில் இடம்பெற்ற மோசடி தொடர்பான ஆவணங்கள் கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சி.ஐ.டி.யினரால் மீட்கப்பட்டுள்ளது.