13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு!

prison
prison

போதைப்பொருள் தடுப்புபிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி வரை நீடிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.