விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள 100 கிலோ மாட்டிறைச்சி!

a9f9a59fe770f1b3763418f1496ee344 M 1
a9f9a59fe770f1b3763418f1496ee344 M 1

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது, முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவேளை, விஷேட அதிரடிப் படையினரால் குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இறைச்சியாக்குவதற்குத் தயார் நிலையில் இருந்த 33 ஆடுகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் நாணயக்கார, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமைத்துவ அதிகாரி அசோக் குமார மற்றும் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.எம்.பஹாத் ஆகியோரின் உத்தரவின்பேரில், புலனாய்வுத்துறையினரின் உதவியுடன், இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.