நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் மீட்பு!

1 25 1
1 25 1

இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தொடர்பில் ஆராயப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் நாளை குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் என்றும் பொலிஸார் கூறினர்.