உயிர் நீத்த பாதுகாப்புப் படையினரை நினைவு கூறும் முகமாக வருடாந்தம் நடத்தப்படும் பொப்பி தினத்தை முன்னிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று பாராளுமன்றத்தில் பொப்பி மலர் அணி வைக்கப்பட்டுள்ளது .
பாதுகாப்புப் படைவீர்கள் சங்கத்தின் 2020 பொப்பிமலர் நினைவு தினத்தின் தலைவர் குரூப் கப்டன் கே. டபிள்யூ. கிரிந்த சபாநாயகருக்கு பொப்பி மலரை அணிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பாதுகாப்பு படை வீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .