வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் .
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை விஷேட விமானத்தில் அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இந்நிலையில் கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் .
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் பதுளை , மாத்தறை , கண்டி, ஹம்பகா மற்றும் குருணாகல் பகுதிகளை சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருகின்ற இந்த நாட்டு மக்களை பாதுகாக்கவே தனிமைப்படுத்துகின்றோம். அச்சப்படத் தேவையில்லை இவ்வாறு பெரியகாடு இராணுவ முகாம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து தொழில் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்றவர்கள் இலங்கைக்கு திரும்பி வரும்போது இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் செயல்முறைகளுக்கு அவர்கள் உட்படவேண்டும் . இவ்வாறு அழைத்து வருபவர்கள் அச்சமடையத் தேவையில்லை . இந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் தங்களையும் தங்கள் உறவினர்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் பணியில் அச்சமின்றி பங்கேற்கவும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.