மட்டக்களப்பில் இதுவரை 14 தேர்தல் முறைப்பாடுகள்

election violence
election violence

மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக உதவி தெரிவத்தாட்சிஅலுவலர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 05 முறைப்பாடுகளும், ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 05 முறைப்பாடுகளும், காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 02 முறைப்பாடுகளும், வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 02 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதியாகவும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மதித்து பின்பற்றி முறையான சட்டரீதியானஅனுமதியினை பெற்று கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்களை நடத்திகொள்ளலாம் எனவும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.