முஸ்லிம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு வெளிப்படையான விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஆலோசனை வழங்கியதாக முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர உயிர்த்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.