தமிழ் தரப்பின் ஆதரவு யாருக்கு – இறுதி முடிவு இன்று

6
6

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் 5 தமிழ் கட்சிகளை ஒருங்கிணைந்து நடக்கும் கூட்டம் இன்று மாலை யாழ் பிறைட் இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றம் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறீகாந்தா, வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.