யாழ்ப்பாண பல்கலைழகத்தின் வவுனியா வளாக தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஒரு வகையான காய்ச்சல் காரணமாக வவுனியா வளாகத்தை சேர்ந்த சில மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.