கல்முனை 2 கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், இறந்த பெண்ணின் மகளால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில், கல்முனை 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.