‘பொடி லெசி’ யை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (25) காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.