மட்டக்களப்பு வெருகல் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த முதியவர் வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைபயிர் செய்கை செய்து வருவதாகவும்; வழமைபோல் இன்று காலை தோணியில் சேனைப்பயிர் செய்கை பகுதிக்கு ஆறின் ஊடாக தனிமையில் பயணித்தபோது தோணி கவிழ்ந்ததில் ஆற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .