போக்குவரத்து அமைச்சருக்கு கிடைத்த புதிய பதவி !

625.500.560.350.160.300.053.800.900.160.90 8 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 8 3

பொது மனுக்கள் தொடர்பான குழுவின் தலைவராக போக்குவரத்து அமைச்சர் – காமினி லொகுகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் தொடர்பான குழுவின் தலைவர் பதவிக்கு அமைச்சர் காமினி லொகுகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கேடாகொட மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலே, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் தொடர்பான குழுவின் முதல் கூட்டத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களான அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, வியாழேந்திரன் மற்றும் தேனுக விதானகமகே, இம்தியாஸ் பாகிர் மார்கார், திலீப் வேதாராச்சி, காதர் மஸ்தான், அசோக்க ப்ரியந்த, மிஜிபுர் ரஹுமான், குலசிங்கம் திலீபன், நிபுண ரனவக்க, தீத்தா குமாரசிங்க, ரஜிக விக்ரமசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், 8 ஆவது நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் தொடர்பான குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பொது மனுக்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது