காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம்!

1 35 1
1 35 1

எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் வருவதை முன்னிட்டு காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலியை சேர்ந்த பர்ணாந்து என்ற 73 வயது முதியவரே குறித்த துவிச்சக்கர வண்டிப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த 23 ஆம்திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டபயணம், இன்றையதினம் வவுனியாவை அடைந்தது.

வவுனியா மாவட்டசெயலகத்திற்கு வருகைதந்த அவரை சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன் தலைமையில், முதியோர் சங்க பிரதிநிதிகள் வரவேற்றிருந்ததுடன்,மாவட்ட அரசஅதிபர் சமனபந்துலசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

தனது உணவு பழக்கவழக்கம் மற்றும்,போதைபாவனையற்ற வாழ்க்கை முறையால் தான் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டிருப்பதாகவும், இதனாலேயே நீண்ட தூரம் துவிச்சக்கர வண்டிப்பயணத்தை மேற்கொள்ளவும் முடிந்துள்ளது. ஒருவர் ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் 70 வயதிலும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று கூறும் அவர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்குடன் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச முதியோர் தினம் அன்று ஆரம்பித்த இடமான காலியில் தனது பயணம் முடிவடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரது பயணம் நாளையதினம் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.