ஊழல் மோசடி காரர்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை

s.premadasa 1 1
s.premadasa 1 1

எனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தவிர வேறு யாரையும் நியமிக்க மாட்டேன் என்று புய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (Oct.30) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழல் மோசடி காரர்களுக்கு எனது அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டேன். அவர்களுக்கு பதவி வேண்டுமாயின் முதலில் அவர்களின் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும். அதற்காக அவர்கள் கைகளை கழுவிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.