பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று முன்தினம் நாடு திரும்பியிருந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளார் .
சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து அவர்களுடனான சந்திப்பின்போது ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியின் அதிருப்தியாளர்களின் ஒரு தொகுதியினர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், கண்டியில் இன்று இடம்பெறும் கூட்டத்தில், சுதந்திர கட்சி அதிருப்தியாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.