மறைந்த தென்னிந்திய பிரபல பாடகர் S.P பாலசுப்ரமணியத்தின் அஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மரணித்த பிரபல பாடகரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பாலசுப்ரமணியத்தின் வவுனியா மாவட்ட ரசிகர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரபல பாடகர் S.P பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்றையதினம் இறைவனடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது