தான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுமாறு அரச அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி !

3bd94a7a2c3a4ff5fe08726fb1ca4316
3bd94a7a2c3a4ff5fe08726fb1ca4316

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசஅலுவலகங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதெரிவித்துள்ளார் .

பதுளை ஹல்துமுல்லவில் உள்ள வெலன்விட்ட கிராம மக்களைசந்தித்து உரையாடுகையில் அவர் இவ்வாறு கூறினார்

இதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி தான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர்

மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வை அரச அதிகாரிகள் முன்வைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். மக்களின் சார்பில் உறுதியான சரியான தீர்மானங்ளை எடுக்கும் அதிகாரங்களுக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன்” எனவும்மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .