ஹெரோயின் போதைப்பொருளுடன்இளைஞன் கைது !

1601128877 ARREST 2
1601128877 ARREST 2

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம்வைத்திருந்த இளைஞன் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அருகே நேற்று (25) மாலை சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் நடமாடுவதாக புலனாய்வு தகவல் ஒன்றினை அடுத்து கல்முனை பொலிஸார் சந்தேக நபரான இளைஞனை சோதனை செய்தனர்.

இதன் போது இளைஞனிடம் இருந்து 1 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளைபொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து ஹெரோயினை விநியோகம் செய்ய வருகை தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதானவர் 29 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபரை தடுத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.