ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

rDKO8YkqhkpRt2rQaWF9s16zvh16wJmK
rDKO8YkqhkpRt2rQaWF9s16zvh16wJmK

அத்துருகிரிய, பொரல்ல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரங்கல சந்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொரல்ல – சஹஸ்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.