அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குறித்த குழுவின் ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒக்டோபரில்!

download 3 1
download 3 1

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குறித்த குழுவின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொது நிறுவனங்கள் தொடர்பான அமர்வுகளுக்கு ஊடகங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை ருவிட்டரில் பதிவிட்டுள்ள சரித்த ஹேரத், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குறித்த குழுவின் (கோப்) நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு திறக்கப்படுதல் குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள கோப் குழுவின் கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.