சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ,முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன்ராகவன் இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று பகல் 1மணியளவில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வவுனியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் மாவட்டத்தின் குளங்கள் புனரமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் அமைப்பின் தலைவர் மற்றும் வவுனியா மாவட்டத்தின் அனைத்து விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.