வெளிநாடு சென்ற வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

வெளிநாடு சென்ற வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாக்காளருக்கு கடவுச்சீட்டை சமர்ப்பிக்க முடியாவிட்டால், மற்றொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்ற வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பதிவேட்டின் சாதாரண குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.