20ஐ பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என்கிறார் பியல் நிஷாந்த!

1557122160 Piyal Nishantha 2
1557122160 Piyal Nishantha 2

நீதிமன்றம் வழங்கும் ஆலோசனையை முழுமையாக செயற்படுத்தி 20 ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என ஆரம்பக் கல்வி மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஜனாதிபதி சர்வாதிகார போக்கிற்கு செல்வதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

20 ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் புதுமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆளும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவார்கள்.

உயர்நீதிமன்றம் வர்த்தமானியில் வெளியாகியுள்ள 20 ஆவது திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் வழங்கும் சட்ட ஆலோசனைகளை முழுமையாக செயற்படுத்தி திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.