இலங்கையுடனான டெஸ்ட் தொடரை மீண்டும் ஒத்தி வைப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது .
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா விதிமுறைகள் காரணமாகவே இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒக்டோபரில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.
பெப்ரவரி முதல் இலங்கை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை, மேலும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான கிரிக்கெட் தொடர்களும் கொவிட் 19 நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது