கொழும்பை நோக்கி காட்டு யானைகள் படையெடுக்கும் ஆபத்து

images 2 1
images 2 1

நாட்டின் பல மாவட்டங்களில் யானை – மனிதன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கொழும்பிற்கும் காட்டு யானைகள் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் காட்டு யானைகள் கொழும்பு நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளுக்கு நாள் காட்டு யானைகளின் தாக்கங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் இரண்டு பிரதேங்களில் இருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

காட்டு யானைகள் கொழும்பை நோக்கி படையெடுத்தால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.