பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே குறித்த நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதிக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளதோடு, புதிய கடவுச் சீட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.