சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் 84 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவு!

20200929 143126
20200929 143126

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்தார்

கடந்த 24 மணித்தியாலநேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 84 மில்லி மீற்றர் மழை வீழ்சியானது யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

வீசிய கடும் காற்றின் காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணபவானந்த வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்து வகுப்பறை சேதமடைந்துள்ளது குறித்த மரமானது யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது

எனினும் கடந்த 24 மணித்தியாலத்திற்கு வளிமண்டல திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவித அனர்த்தங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்

IMG 20200929 WA0047
IMG 20200929 WA0047
IMG 20200929 WA0052
IMG 20200929 WA0052
IMG 20200929 WA0049
IMG 20200929 WA0049
IMG 20200929 WA0051
IMG 20200929 WA0051
IMG 20200929 WA0050
IMG 20200929 WA0050