முஸ்லிம் மக்களுக்கு தற்கொலைசெய்து இறக்க வேண்டிய பிரச்சினைகள் இல்லை என்கிறார்- முஜிபுர் ரஹ்மான்

Mujipoor rawman
Mujipoor rawman

இலங்கையில் வாழக் கூடிய முஸ்லிம் மக்களுக்கு, தற்கொலை செய்து இறக்க வேண்டிய பிரச்சினைகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளங் காண வேண்டும் எனில், தாக்குதலுடன் தொடர்புடைய, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் ஸாரா என்ற பெண்ணை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.