கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்கி வைப்பு!

கொரோனாவினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வலுவிழந்தோரின் 20 குடும்பங்களுக்கு 1200/= ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச மட்ட வலுவிழந்தோர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வலுவிழந்தோர் அமைப்பினால் இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ், சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஜ.எம். முர்சித், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எல்.பாஸ்கரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இஸட்.எம்.றியாஸ் என பலர் கலந்து கொண்டனர்.