பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!

“பசுமைப்புரட்சி” என்ற கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த இருதினங்கள் இடம்பெற்றது.

பிரபாகரன் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன் அவர்களினால் குறித்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பாடசாலைகளில் நாட்டப்பட்டது.

நேற்றைய தினம் தெற்கு வலயத்திற்குட்பட்ட பாசலைகளிற்கும் இன்று வடக்கு வலயத்தை சேர்ந்த  பாடசாலைகளுக்கும் குறித்த மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் 10000 வேப்பமரக்கன்றுகள் எதிர்காலத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் சுஜீவன் தெரிவித்தார்.