இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசமாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி சரிந்து வீழ்ந்துள்ளதுடன், பயன் தரு மரங்களான தென்னை, வாழை என்பன முறிந்து வீழ்ந்துள்ளது.
இன்று யாழ் குடா நாட்டில் காலை பலத்த மழை பெய்ய ஆரம்பித்திருந்த நிலையில் 04:15 மணியளவில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .