இணைக் குழுவை நியமிக்க பிரதமர் அழைப்பு!

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முறையற்ற இடமாற்றங்களை தவிர்த்து தேவையான இடமாற்றங்களை மாத்திரம் முன்னெடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.