உலகளவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றிலிருந்து, இரண்டரை கோடி மக்கள் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் இரண்டு கோடியே 54 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதேவேளை மொத்தமாக வைரஸ் தொற்றினால், மூன்று கோடியே 41இலட்சத்து 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பத்து இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
அதற்கு அடுத்தப்படியாக, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.