அமைச்சர் அருந்திக பர்னான்டோ கிளிநொச்சிக்கு விஜயம்!

அமைச்சர் அருந்திக பர்னான்டோ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள விவசாய பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் அங்கு மஞ்சள் உற்பத்தியினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கயன் இராமநாதன், அமைச்சின் செயலாளர், பனை தென்னை அபிவிருத்தி சபை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.