சிறுவர்களே ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் – பிரதமர்

Mahida Rajapaksa
Mahida Rajapaksa

சிறுவர்களே ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,” சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தமது அடிப்படை உரிமைகளை பெற உரித்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் நாம் இப்போது பணியாற்ற வேண்டும்.

மேலும் ஒரு குழந்தையை ஒரு செயற்திறன் மிக்க நபராக மாற்றுவது சமூகத்தின் கூட்டுப் பணியாகும். இது குடும்பம் மற்றும் அரசாங்கத்தினது மட்டுமன்றி, பாடசாலை, ஆசிரியர்கள், மத வழிகாட்டிகள் மற்றும் சமூகங்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

சிறுவர்களைஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கும் அவர்கள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்களா என்பதை உறுதிசெய்வதும் எமது பொறுப்பு என மேலும் தெரிவித்துள்ளார்.