இலங்கை கடற்பப்பில் தீப்பற்றி எரிந்த MT New Diamond எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
அதேபோல், ஏனைய இழப்பீடுகளும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.