முஸ்லிம் காங்கிரஸிற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கண்டனம்

prasanthan
prasanthan

தேர்தல் பிரசார மேடைகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அவற்றின் உறுப்பினர்கள் மிக மோசமான வகையில் குற்றம் சாட்டி வருவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தேர்தல் கண்காகணிப்பு குழுவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள முறைப்பாடானது நூறு வீதம் உண்மைக்குப்புறம்பானது என மட்டக்களப்பில் இன்று (Nov.1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் போராளிகளுடாக குழப்பத்தை ஏற்படுத்த முனைவதுடன் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தமிழர்கள் தங்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோத்தாபயவை ஆதரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.