வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

IMG 6787720696e7aa2a181db79d05391935 V
IMG 6787720696e7aa2a181db79d05391935 V

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (02) அதிகாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை வேலங்குளத்தில் உள்ள அவரது வீட்டினை சோதனை மேற்கொண்ட போது அவரிடமிருந்து  775 மில்லிகிராம் கேரள கஞ்சா  கைபற்றப்பட்டுள்ளது.

வவுனியா வேலங்குளம் பகுதியை சேர்ந்த  26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) ஒப்படைக்கவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.