நாட்டின் தற்போதைய நாடாளுமன்றத்தின் முதலாவது மாத செயற்பாட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்ளில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில்இணையத்தளம் ஒன்று இந்த செயற்பாட்டினை துக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
நாடாளுமன்றத்தின் முதல் மாத செயற்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களில் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லைஎன்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதலிடத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க இருப்பதுடன் எதிக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்திலும் ஆளும் கட்சியின் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரும் இறுதி இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் உள்ளதாக தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.